×

எஞ்சிய 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: புவனேஸ்வர், பும்ரா சேர்ப்பு

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான எஞ்சிய 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும், இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது. சொந்த மண்ணில் இத்தனை ரன்கள் அடித்தும் வெற்றி பெற முடியவில்லை என இந்தியாவும், சிறப்பாக சேஸ் செய்ய வீரர்கள் பேட்டிங் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என விண்டீஸ் அணியினரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா(துணை கேப்டன்), ஷிகார் தவான், அம்பதி ராயுடு, தோனி (WK), ரிஷப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், கலீல் அகமது, ஜாஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளனர். 14 பேர் அடங்கிய இந்திய அணியில் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சொந்த மண்ணில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, மிகுந்த நம்பிக்கை வாய்ந்த பவுலர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை அணிக்கு அழைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Indian ,Bhuvaneswar , One Day Match, Indian team, Bhubaneswar, Bumra
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...