×

ஜோதிடர் தோஷம் என கூறியதால் கூலிப்படை கும்பல் உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பட்டாளம்மன் கோயில் அருகே, கடந்த 13ம் தேதி இரவு பாதி எரிந்த நிலையில் முட் புதரில் பெண் சடலம் கிடந்தது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ததில், அவர் திருமணமான பெண் என்பது தெரிய வந்தது. அந்த பெண் யார், அவரை கொலை செய்து எரித்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில், சடலமாக கிடந்தவர் பாலக்கோடு அருகே அருந்ததியர் காலனிய சேர்ந்த மூர்த்தி (40) என்பவரின் 2வது மனைவி துர்காதேவி (35) என்பது தெரிய வந்தது.

அவரை கொன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்தபோது கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையிர் மூர்த்திதான் மனைவியை கூலிப்படை முலம் கொன்றது கண்டபிடிக்கப்பட்டது. அதுபற்றி போலீசார் தெரிவித்ததாவது, மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4ஆண்டுகளுக்கு முன் இவரை பிரிந்து சாலா சென்று விட்டார். கடந்த ஓராண்டிற்கு முன், பெங்களூரை சேர்ந்த துர்காதேவி என்பவரை 2வதாக மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் மூர்த்தி ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது துர்காதேவிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், அதன் மூலம் மூர்த்தியின் உயிருக்கு ஆபத்து எனவும் ஜோதிடர் கூறியுள்ளார்.

இதனால் துர்காதேவியை தீர்த்து கட்ட, மூர்த்தி முடிவு செய்து, பெங்களூரை சேர்ந்த ஷகில்(23), அம்ருதீன்(22), பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த சாதிக்பாஷா(24) ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து, கடந்த 11ம் தேதி இரவு, துர்காதேவியை கழுத்தறுத்து கொலை செய்து, முட்புதரில் வீசி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து கொலைக்கு காரணமான, மூர்த்தி, கூலிப்படையை சேர்ந்த ஷகில், அம்ருதீன், சாதிக்பாஷா ஆகியோரை கைது செய்துள்ளோம். கைதான 4பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : astrologer , Astrologer, dosham, wife
× RELATED சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி