சென்னை: சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பாக, குமார ராணி மீனா முத்தையா கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் ேநற்று நடந்தது. இந்த முகாமை துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி தொடங்கி வைத்தார். குமார ராணி மீனா முத்தையா கல்லூரி மற்றும் பள்ளியைச் சேர்ந்த 800 மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் மாநகராட்சியின் சுகாதார தூதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி