×

திருவையாறு அருகே கொடூரம் சிறுமியை நிர்வாணமாக்கி சூடுவைத்து சித்ரவதை

திருவையாறு : சிறுமியை நிர்வாணப்படுத்தி சூடுவைத்து சித்ரவதை செய்த பெண் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கருப்பையா மகள் வானதி(14) (ெபயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கருப்பையா, மாட்டு வண்டியில் மணல் ஏற்ற செல்லும்போது உடன் மகளையும் அழைத்து செல்வாராம். மணல் அள்ளும் இடத்தில் குடிதாங்கியை சேர்ந்த செந்தில் மகன் வசீகரன்(16) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், வானதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தபோது வானதியிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த அதே பகுதியில் உள்ள வானதியின் உறவினர்களான கண்ணன் (எ) கோபாலகிருஷ்ணன்(29), இவரது சகோதரர் மகேந்திரன் மற்றும் சிவகுமார் (31) ஆகியோர் வானதியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதற்கு வானதி உடன்படாதால் இவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 15ம் தேதி கண்ணனின் செல்போனை திருடியதாக கூறி வீட்டில் இருந்த வானதியை 3 பேரும் அடித்து இழுத்து கொண்டு அப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து, சூடு வைத்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த வித்யா என்ற பெண்ணும் அவர்களுடன் இணைந்து வானதியை தாக்கியுள்ளார். இதனால் வானதி மயங்கி விழுந்தார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து சென்றனர்.

பின்னர் மயக்கம் தெளிந்து மரத்தில் தன்னை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து கொண்டு வாழைத்தோப்பில் வானதி அழுது கொண்டு நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த வானதியின் தந்தையின் நண்பர் கருப்பையாவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வானதியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் கருப்பையா சேர்த்தார். இந்த தகவல் கிடைத்ததும் திருவையாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா, அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை வானதி கூறினார். அதன்பேரில் கடந்த 15ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து தாக்கியதாக கோபாலகிருஷ்ணன், மகேந்திரன், சிவக்குமார், வசீகரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும் சிறுமியை தாக்கியதாக வித்யா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் 5 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தஞ்சை மகிளா கோர்ட்டில் 5 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது மகேந்திரன், சிவக்குமார், வித்யா, கண்ணன் ஆகியோரை திருச்சி சிறையிலும், வசீகரனை தஞ்சை இளம் சிறார் சிறையிலும் அடைக்க நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirvana ,Thiruvaiyar , Thiruvaiyar, naked, tortured and tortured
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...