×

காஞ்சிபுரத்தில் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் நாகலாத்தம்மன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு மருந்துகள் வெடித்ததால் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்ததால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாகீரா பானு, முஸ்தா மற்றும் மஸ்தான் என்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி, வீட்டை பட்டாசு தயாரிக்கும் குடோனாக மாற்றி நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு பண்டு சீட்டு நடத்தி அதற்கு இரவலாக பட்டாசுகள் வழங்குவதற்காக சுமார் 1000கும் மேற்பட்ட பட்டாசு பெட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு முழுவதும் இடிந்து நாசம் ஆனது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களில் தற்போது 2 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது எனவும், 3வது உடலை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மேலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த குடோனில் மொத்தம் 6 பேர் வேலை பார்த்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்தது மட்டுமே அதிகாரபூர்வ தகவலாக உள்ளது. மீதம் உள்ள 3 பேரின் நிலைகள் பற்றி தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அனைத்த பின்னரே, வெடி விபத்து சம்பவம் குறித்து விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : explosions ,house ,Kanchipuram , Kanchipuram,country bombs,kills,exploded
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...