×

காஞ்சிபுரத்தில் பேரணி நடத்த முயன்ற யமஹா, என்பீல்ட் தொழிலாளர்கள் 1000 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த முயன்ற யமஹா, ராயல் என்பீல்ட் தொழிலாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொழிற் சங்கத்திற்கு அங்கீகாரம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யமஹா மற்றும்  ராயல் என்பீல்ட் நிறுவன தொழிலாளர்களும் கடந்த 40 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை.

அதனால் தொழிலாளர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  செல்போன் டவர் மீது ஏரியும் போராட்டங்கள் நடந்த நிலையில் 750 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரகடத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்துவதற்காக 1000 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஒன்று கூடினர்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yamaha ,Kanchipuram ,Enfield , Kanchipuram, Collectorate, Yamaha, Royal Enfield, Workers
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு