×

குப்பை தீயில் விழுந்த குழந்தை கருகி சாவு: பெற்றோர் கொளுத்திய நெருப்பில் பலியான சோகம்

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராமில் குப்பை தீயில் விழுந்து 2 வயது குழந்தை உடல் கருகி பரிதாபமாக இறந்தது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை, கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா.  இவர்களுக்கு பிரதீப்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டில் இருந்த தேவையில்லாத பொருட்களை சேகரித்து உள்ளனர். பின்னர், அதனை வீட்டுக்கு  வெளியே தெரு ஓரமாக தீவைத்து கொளுத்தி உள்ளனர். பின்னர், அவர்கள் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டனர். சிறிது நேரம் கழித்து குழந்தை பிரதீப் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான்.

பின்னர்,  அவன் அணைத்து வைக்கப்பட்டிருந்த குப்பை சாம்பலில் விழுந்துள்ளான். இதில், அவனது உடல் முழுவதும் தீகாயம் ஏற்பட்டு வெந்தது. அவனை பெற்றோர்கள் மீட்டு பட்டாபிராமில் உள்ள  தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.  பின்னர், அவனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை  பலனின்றி பிரதீப் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : baby ,garbage fire , The garbage ,Childbear death,Poor sleep ,burning fire
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி