×

நகைக்காக சாதுவை கோடாரியால் வெட்டிக் கொன்றார் மற்றொரு சாது

ஜெய்ப்பூர்: நகைக்காக ஒரு சாதுவை, மற்றொரு சாது கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானின் பாதபுரா கிராமத்தில் அனுமான் கோயில் உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக அலோக் சிங் என்ற சாது வசித்து வந்தார். இந்நிலையில் மத்தியப் பிரசேத்தில் இருந்து வந்த சாது பாலக்தாஸ் என்ற லாலாராம் இங்கு வந்து தங்கினார்.

அலோக் சிங் கையில் தங்க மோதிரம், கழுத்தில் டாலருடன் கூடிய தங்க செயின் அணிந்திருந்தார். இதை திருடி செல்ல திட்டமிட்ட பாலக்தாஸ், அலோக் சிங்கை கோடாரியால் வெட்டிக் கொன்றார். நகைகளுடன் பாலக்தாஸ் தப்பிச் செல்ல முயன்றபோது, அக்கம்பகத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சாது பாலக்தாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வெட்டிய கோடாரியை பறிமுதல் செய்தனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sadhu ,goddess , Sathu, ax, killing Vettik
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...