×

மீ டூ பாலியல் புகார் தெரிவித்த பெண் கவிஞரிடம் ரூ1 நஷ்டஈடு கோரி இயக்குனர் சுசி கணேசன் வழக்கு

சென்னை: மீ டூ ஹேஷ்டேக் மூலம் கவிஞர் லீனா மணிமேகலை என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டரில், இயக்குனர் சுசிகணேசன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குனர் சுசிகணேசன் உதவி இயக்குனர், குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்ப முடியாமல், ஏனோ என் மீது வன்மையை துப்பியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை, உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன், நஷ்டஈடு கோரி லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி, பொய்யான புகாரை, குற்றச்சாட்டை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார். சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனவே வழக்கை விசாரித்து ரூ.1 நஷ்டஈடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suasi Ganesan ,Rs , Me to Do Sex Complaint, Female Poet, Director Susi Ganesan, Case
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...