×

தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி :  ஆயுத பூஜை விடுமுறை மற்றும் கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை என  தொடர் விடுமுறை வந்ததால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டி சுற்றுலா தலங்களில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் பூஜை விடுமுறை என்பதாலும், கர்நாடக மாநிலத்தில் தசார  பண்டிகை விடுமுறை, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை  வந்துள்ள நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு  அதிகரித்துள்ளது.

 நேற்று முன்தினம் முதலே வெளியூர் மற்றும் கர்நாடக மாநில  சுற்றுலா பயணிகள் ஊட்டியை மொய்க்க துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள்  வருகை அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள்  நிரம்பியுள்ளன. இரண்டாம் சீசன் என்பதால், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களின் அறை  கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில்  முகாமிட்டுள்ளனர்.

 சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், கடைவீதிகளில் சுற்றுலா  பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் ஊட்டி கடை கட்டியுள்ளது. இதனால் கமர்சியல் சாலை ஒரு  வழிபாதையாக  நேற்று மாற்றப்பட்டது. சுற்றுலா பயணிகள் வாகனங்களால், ஊட்டி  நகரின் பல்வேறு சாலைகளில் நேற்று  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதேேபான்று, தொட்டபெட்டா செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், உள்ளூர்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Holidays, long weekends,Ooty, tourist people
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...