ஈரோடு: ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையின் 2-வது மாடியில் சுமார் 8 அடி நீளத்தில் இருந்த சன்ஷேடு உடைந்து மருத்துவமனை கட்டிடத்தை ஒட்டியுள்ள தரையில் விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த சுதாகர் (28), செந்தில்குமார், விஜயபாபு (56), தறி தொழிலாளி பழனியப்பன் (60), ராமாயி (70) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வார்டில் இரவு தங்க அனுமதியில்லை என்பதால், மருத்துவமனைக்கு வெளியே தரையில் படுத்து தூங்கிய போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி