சென்னை: கொச்சுவேலியிலிருந்து பன்சாவடிக்கு 20ம் தேதி முதல் புதிய சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கொச்சுவேலியில் இருந்து பன்சாவடிக்கு வரும் 20ம் தேதி முதல் புதிய சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலை மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் கொல்லம், சேங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், பாங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கொச்சுவேலியிலிருந்து பன்சாவடிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.05 மணிக்கு கொச்சுவேலியிலிருந்து கிளம்பி வெள்ளி மற்றும் ஞாயிற்று காலை 10.45 மணிக்க பன்சாவடி வந்து சேரும்.
இந்த கொல்லம், சேங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், பாங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி