×

உமறுப்புலவர் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு: அறக்கட்டளை நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆன்றோர்ளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், 2017-18ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையின்போது, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள அமுதகவி உமறுப்புலவரின் மணிமண்டபத்தில், அவரின் பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உமறுப்புலவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு, உமறுப்புலவர் வாரிசுகள்,

இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாகிகள், உமறுப்புலவர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசு மானியம் வழங்கியமைக்காவும், இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும் நன்றி தெரிவித்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebration , Humble, birthday, government festival, trust executives, thank you
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்