×

தெலங்கானாவில் பழங்குடியின பெண்களுக்காக நாப்கின்களை தயாரிக்கும் 'பேட்'உமன்கள்

ஐதராபாத்: தெலங்கானாவில் பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்பட்டு வரும் நாப்கின்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து கூடுதலாக 4 அலகுகள் அமைக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் துணிகளை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாப்கின்களை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும் நாப்கின்கள் பயன்படுத்தும்  பழக்கம் முழுவதுமாக சென்றடையவில்லை என்றே கூறலாம். நகரங்களில் இது கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், ஒரு சில கிராமங்களில் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. அதேபோல பழங்குடியின பெண்களுக்கும் நாப்கின்கள் வசதி கிடைப்பதில்லை. இந்நிலையில் தெலங்கானாவில் பழங்குடியின பெண்களால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாப்கின்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.

அதனை இலவசமாக பழங்குடியின மாணவிகளின் விடுதிக்கும், ஆசிரம பள்ளிகளுக்கும் அவர்கள் வழங்கி வந்தனர். இதன்மூலம் மாதத்திற்கு 6,000 முதல் 7000 நாப்கின்கள் தயாரிக்க முடியும். ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு முகமை சார்பில் இந்த அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதிவாசி பெண்களால் தயாரிக்கப்படும் நாப்கின்களின் தேவை அதிகரித்துள்ளதால் கூடுதலாக 4 அலகுகள் அமைக்கப்பட உள்ளன.  புதிய அலகுகள் அமைக்கப்பட்டால் ஒரு காலாண்டிற்கு 40,000 நாப்கின்கள் தயாரிக்க முடியும். பின்னர் அந்த நாப்கின்கள் பழங்குடியின சமூக மக்களுக்கு வழங்கப்படும். தெலங்கானாவில் பெரும்பாலான பழங்குடியின பெண்கள் இன்னும் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பயன்படுத்தி வருகின்றனர். புது அலகிற்கான பணம் ஒதுக்கப்பட்ட பின்னர் வெவ்வேறு விதமான நாப்கின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு அலகிலும் 30 பெண்கள் என மொத்தமாக 120 பெண்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தார். இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடா முயற்சியால், பிரத்யகே இயந்திரம் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்கு கொண்டு வந்தார். பெண்களுக்காக ஆரோக்கியமான நாப்கினை குறைந்த செலவில் தயாரித்த தமிழகத்தின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் பேட்மேன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bad ,women ,Telangana , Telangana, Tribal, Napkin, Menopause
× RELATED 180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு...