டெல்லி : நடிகர் அலோக்நாத் மீது பாலியல் புகார் கூறிய தயாரிப்பாளரும், எழுத்தாளருமான வின்டா நந்தாவிடம் ரூ. 1 இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வின்டா நந்தா ரூ. 1 இழப்பீடும் மன்னிப்புக் கடிதமும் வழங்க உத்தரவிட கோரி அலோக்நாத்தின் மனைவி நீதிமன்றத்தில் மனு அளித்தார். அலோக்நாத் தன்னை 20 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததாக வின்டா நந்தா மீ டூவின் கீழ் குற்றம் சாட்டியிருந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி