×

வியாசர்பாடி அருகே காவல்நிலையத்தில் இளைஞர் மரணம்: போலீசாரே அடித்து கொன்றதாக உறவினர்கள் புகார்

சென்னை: சென்னை வியாசர்பாடி அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்ததால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பதற்றத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாசர்பாடியை அடுத்த பக்தவச்சலம் காலனியை சேர்ந்த கார்த்திக் என்ற 25 வயது இளைஞர் தான் உயிரிழந்தவர் ஆவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சென்னையை அடுத்த சோழவரத்தில் நடந்த கொலை தொடர்பாக 6 மாதங்களாக கார்த்திக்கை போலீசார் தேடி வந்தனர்.

சகோதரனின் திருமணத்திற்கு வந்த அவரை கைது செய்த போலீசார் MKB நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் திடீரென உயிரிழந்தார். இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் போலீசாரே அடித்து கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் கார்த்திக்கு உணவு வாங்கித்தந்தாகவும், அப்போது வாந்தி எடுத்தவர் திடீரென இறந்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கின் உடல் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யும் வரை கார்த்திக்கின் உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Youth death ,police station ,Relatives ,Vyasarpadi , Youth,death,police station,Vyasarpadi,Relatives,complain,police,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...