×

மனைவியுடன் நெருக்கமாக அமர்ந்து சினிமா பார்த்த காதலனை தியேட்டரிலேயே புரட்டி எடுத்த கணவன்

சென்னை: மனைவியுடன் ஜாலியாக சினிமா பார்த்து ெகாண்டிருந்த காதலனுடன்  கணவன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் மயிலாப்பூர் தியேட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையை சேர்ந்தவர் பூர்ணிமா (32). இன்ஜினியர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய, இன்ஜினியர் மித்திரன் (34) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதன்பிறகு இருவரும் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பாரதி (6), கவிதா (3) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பூர்ணிமாவுக்கு தன்னுடன் வேலை செய்யும் சாரங்கன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் மித்திரன் மனைவியிடம் கேட்டுள்ளார். இதுபெரிய சண்டையாக வெடிக்கவே, தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கணவரிடமே விட்டுவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பூர்ணிமா காதலன் சாரங்கனிடம் செட்டிலாகிவிட்டார். இரண்டு குழந்தைகள் இருப்பதையே மறந்தும்விட்டார். நேற்று முன்தினம் மித்திரன் தனது இரண்டு குழந்தைகளுடன் மயிலாப்பூர் வணிக வளாகத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். அந்த தியேட்டரில் பூர்ணிமாவும் அவரது காதலன் சாரங்கனும் படம் பார்க்க வந்துள்ளனர். அப்போது, பூர்ணிமாவும், சாரங்கனும் தலைகளை உரசியபடி சினிமா பார்த்துள்ளனர்.

தங்களுக்கு படம் பார்க்க முடியாததால், முன் சீட்டில் உட்கார்ந்திருந்த நபரிடம் படம் தெரியவில்லை என்று மித்திரன் கூறியுள்ளார். இதனால் திரும்பி பார்த்த சாரங்கன் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் மித்திரனின் மனைவியான பூர்ணிமாவுடன்தான் சாரங்கன் அவ்வளவு நெருக்கமாக அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்துள்ளார். அத்துடன் மித்தரனை ஒரு பெண்ணிடம் குடும்பம் நடத்த தெரியாதவர் என்று ஏகத்துக்கும் பேசியுள்ளார்.
இந்த வார்த்தைகள் முற்றி இரண்டு பேரும் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சாரங்கனை மித்திரன் புரட்டி எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த  படம் பார்த்தவர்கள் அவர்களின் சண்டையை விலக்கிவிட்டு உள்ளனர். இவர்களின் கதையை கேட்டதும் சினிமாவைவிட படு திரிலிங்காக உள்ளதே என்று கூறியதுடன், பூர்ணிமாவை விமர்சித்துவிட்டும் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில்  இருவரும் பரஸ்பர புகார் அளித்தனர். இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cinematographer ,theater , wife, cinema, lover, husband, theater
× RELATED மது விற்ற 5 பேர் கைது