அம்பத்தூர்: சென்னை, செங்கல்பட்டு மண்டலம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கிராமப்புற கல்லூரிகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர் நியமிக்கவும், தர ஊதியம் ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் பெறுவதற்கான அரசாணை 102ல் திருத்தம் செய்யவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டம் அம்பத்தூர், உழவர் சந்தை அருகில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். இதில், சென்னை, திருத்தணி, பொன்னேரி ஆகிய பகுதியில் உள்ள அரசு கல்லூரிகளை சேர்ந்த 100க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி