×

தொட்டில் சேலை இறுக்கி பள்ளி மாணவி பலி

கோவை: பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை அருகே உள்ள நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீசாதனா(9). அங்குள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ரவீந்திரன், அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பாட்டி லோகநாயகி வீட்டில் இருந்தார். சிறுமி சாதனா தனது தம்பியுடன் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சாதனா கழுத்தில் தொட்டில் இறுக்கியது. அதிலிருந்து மீளமுடியாமல் தவித்த சாதனா சம்பவ இடத்தில் பலியானாள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school student , The school student, kills
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி