பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சோதனையில் கர்நாடகத்தில் பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெங்களூருவில் இரண்டு பேரும், ராம்நகர், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூருவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பன்றி காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதன் தாக்கம் தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி