×

26 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்:போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: சென்னை முழுவதும் 26 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனந்தஜோதி கானாத்தூர் சட்ட ஒழுங்கு பிரிவுக்கும், சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த கிருஷ்ணா சிட்லப்பாக்கம் சட்ட ஒழுங்கிற்கும், நொளம்பூர் சட்ட ஒழுங்கியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், ராயலா நகர் சட்டம் ஒழுங்கில் இருந்த சுப்பிரமணியன் வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், வடபழனி குற்றப்பிரிவில் இருந்த பசுபதி அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், கே.கே.நகர் குற்றப்பிரிவில் இருந்த தங்கராஜ் அண்ணாசாலை சட்டம் ஒழுங்கிற்கும், ஆவடி குற்றப்பிரிவில் இருந்த முருகேசன் ஆவடி சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அசோக்குமார் டி.பி. சத்திரம் சட்ட ஒழுங்கிற்கும், வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த சங்கர் கோடை சட்டம் ஒழுங்கிற்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஆனந்த் கொருக்குபேட்டை சட்டம் ஒழுங்கிற்கும், கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் இருந்த கணேசன் உயர் நிதிமன்றம்,

வியாசர்பாடி சட்டம் ஒழுங்கில் இருந்த மோகன்ராஜ் மாம்பலம் சட்டம் ஒழுங்கிற்கும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த மல்லிகா தலைமை செயலகத்திற்கும், கானாத்தூர் குற்றப்பிரிவில் இருந்த கவுதமன் ராயலா நகர் சட்டம் ஒழுங்கிற்கும், அண்ணாசாலை சட்டம்ம் ஒழுங்கில் இருந்த சிவக்குமார் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், மாம்பலம் சட்டம் ஒழுங்கில் இருந்த பிரபு வியாசர்பாடி சட்டம் ஒழுங்கிற்கும், பழவந்தாங்கல் குற்றப்பிரிவில் இருந்த ரத்தினவேல் பாண்டியன் ஏழுகிணறு சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சத்தியலிங்கம் நொளம்பூர் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுராதா புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தண்டையார் பேட்டை குற்றப்பிரிவில் இருந்த ஜெயலட்சுமி எம்கேபி நகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பரணி பெரவல்லூர் குற்றப்பிரிவுக்கும்,

மார்டன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கவுரி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கொருக்குபேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த முருகேசன் மாங்காடு குற்றப்பிரிவுக்கும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்த இளங்கோ காத்திருப்போர் பட்டியலுக்கும், மாங்காடு குற்றப்பிரிவில் இருந்த சிதம்பரபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கும், தலைமை செயலகத்தில் இருந்த விஜயராமலு காத்திருப்போர் பட்டியலுக்கும் பணிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspectors Workplace Transfer ,Police Commissioner ,AK Vivekanathan , 26 Inspectors , Transfer, Police Commissioner AK Vivekanathan
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு