சென்னை : முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசி 4 வழிச்சாலைப்பணிக்கு ரூ.1515 கோடிக்கு டெண்டர் விட்டு ஊழல் நடந்துள்ளது என்று கூறிய பாரதி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீதும் ஊழல் புகார் தெரிவித்தார். இதனிடையே வண்டலூர்-வாலாஜா 6 வழிச்சாலை ஒப்பந்தத்தில் முறைகேடு; உண்மையான மதிப்பீட்டை மறைத்து, முதல்வர் எடப்பாடி சாலைப்பணிக்கான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளார் என்றும் பாரதி குற்றம் சாட்டினார்.இதையடுத்து ஆளுநர் புரோஹித் தமது நடத்தை பற்றி நற்சான்று பெற்று வர வேண்டும் என்று துணைவேந்தர்களை நேர்மையாக நியமிப்பதாக ஆளுநர் கூறியது பற்றி பாரதி கருத்து தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி