சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஸ்தபதி முத்தையா ஆஜராக உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஆணையிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உத்தரவை அடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஸ்தபதி விரைந்தார். சிலைகள் மாயம் குறித்து ஏற்கனவே அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைத்து திருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி