- ஜனாதிபதி
- குடியரசு ராம்நாத் கோவைண்ட்
- எய்ம்ஸ்
- மருத்துவமனை
- தில்லி
- ராம்நாத் கோவைண்ட்
- இராணுவ மருத்துவமனை
- எய்ம்ஸ் மருத்துவமனை
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிண்ட்
- தின மலர்
டெல்லி: ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, நேற்று காலை சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லேசான இதய பிரச்னைகள் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் நலமுடன் இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து, அவரது மகனிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 75 வயதான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்….
The post குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்: உடல்நிலை சீராக உள்ளதாக அறிக்கை appeared first on Dinakaran.