சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒன்றரை நாளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 33 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. இது குறித்து ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட பினாமி அரசின் அனைத்துத் துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி