×

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : மேல்சாத்தம்பூரில் தடுப்பணை நிரம்பியது

பரமத்திவேலூர்: திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பரமத்திவேலூர் அடுத்த மேல்சாத்தம்பூரில் தடுப்பணை நிரம்பியது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், 2ம் போக சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.தமிழகம் முழுவதும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பரமத்திவேலூர் பகுதி மற்றும் திருமணி முத்தாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஏற்காடு மலையடிவாரம்,  சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று காலை பரமத்திவேலூர் அடுத்துள்ள மேல்சாத்தம்பூரில் அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி வழிந்தது.

ஆற்றில் தண்ணீர் வேகமாக வருவதால், இன்னும் ஓரிரு நாட்களில் பில்லூர் அணை நிரம்பி, அதனை அடுத்துள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளமும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், இன்னும் ஓராண்டிற்கு விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2ம் போக பருத்தி மற்றும் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flooding ,Thirumanimuthu , Tirumanimuttar, flooding, dyke
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!