×

இந்த சமுதாயத்தை பாஜ சேர்க்கிறது, காங். பிரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘ஒரு குடும்பம் பயன்பெற வேண்டும் என்பதற்காக சமுதாயத்தில் காங்கிரஸ் பிளவை உண்டாக்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும், அந்த மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவது பற்றியும் பிரதமர் மோடி கருத்து கூறாமல் மவுனம் காத்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், 5 மக்களவை தொகுதிகளை சேர்ந்த பாஜ தொண்டர்களுடன் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, ஒரே ஒரு குடும்பம் பயன்பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இந்த சமுதாயத்தை பிரிக்கிறது. பாஜ மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், மக்களை ஒன்றிணைப்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மற்றவர்களை நமது கட்சி தோற்கடிப்பது என்பது அகந்தை கொள்ளும் விவகாரம் அல்ல. அது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகும். பாஜ சமூக சேவை செய்கிறது. அதை தொடர்ந்து செய்யும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Bhajji ,Kang ,Separatist , This community Bhaj,adding, Kang. Separatist, Prime Minister Modi's, allegation
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...