×

பாரா ஆசிய போட்டியில் சத்தியமங்கலம் பெண் வெள்ளி வென்று சாதனை

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அடுத்துள்ள நாகரணை கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது மகள் ரம்யா (25).  இடது கை விரல் குறைபாடு உள்ளவர். இவர், பள்ளியில் படித்தபோது கராத்தே கற்றார். பின்னர் 7ம் வகுப்பு படிக்கும் போது இவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் இவருக்கு பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஏற்பாடுகளை செய்தனர். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அனைத்து பிரிவுகளிலும் இவர் பங்கேற்று தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.   

தற்போது ஜகர்தா நகரில் 3வது பாரா ஆசிய போட்டி நடக்கிறது.  இதில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ரம்யா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் நாகரணை கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam ,competition ,Asian , Para Asian competition, Sathiyamangalam, silver
× RELATED மாநில அளவிலான சிலம்ப போட்டி: கோவை வீரர்கள் அசத்தல்