×

எண்ணூர் துறைமுகத்துடன் மகாபலிபுரத்தை இணைக்கும் சென்னை சுற்றுவட்டச்சாலைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை :  எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரத்தை இணைக்கும் சென்னை சுற்றுவட்டச்சாலைக்கு தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை பெருநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுற்றுவட்ட சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் இந்த சுற்றுவட்டச்சாலை 6,175 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்களில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் செல்வதற்கு உதவியாக இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலையில் மொத்த நீளம் 133 கி.மீ ஆகும். இதில், 97 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. 35 கி.மீ தூரத்திற்கு ஏற்கனவே இருக்கும் சாலை பலப்படுத்தப்படுகிறது. 81 கிராமங்கள் வழியே பயணிக்கும் இந்த புதிய சென்னை சுற்றுவட்டச்சாலையானது 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் பயணிக்கவுள்ளது.காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கம்பெருமாள் கோவில் வழியே மகாபலிபுரம் செல்கிறது இந்த புதிய சாலை. முன்னதாக இந்த திட்டத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சில நிபந்தனைகளோடு திட்டத்தை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.

சென்னை சுற்றுவட்டச்சாலை அமைக்க நிபந்தனைகள்:

இந்நிலையில் எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரத்தை இணைக்கும் சென்னை சுற்றுவட்டச்சாலைக்கு தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
எந்த ஒரு நீர்நிலைகள் பாதிப்படையக் கூடாது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும்; சாலை அமைக்கப்படவுள்ள கடலோர பகுதிகளுக்கு அருகில் மாங்குரோவ் மரங்கள் நட வேண்டும்; சாலையோரம் பனைமரங்கள் நட வேண்டும்; பொதுப்பணித்துறையிடம் தடையில்லாச்சான்று பெற வேண்டும்,  போன்ற நிபந்தனைகளுடன் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.மேலும் இந்த சாலைத் திட்டத்தால் எக்காரணம்.கொண்டும் மீனவர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்றும் இந்த 2கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாக பயணிக்கவுள்ளதால் மத்திய சுற்றுசூழல் துறையிடம் சான்று பெற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Mahabalipuram ,Ennore , Allowance to the circulatory system of Chennai connecting Mahabalipuram with the Ennore port
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது