×

கூலிப்படை தலைவன் அளித்த தகவலின்படி ரவுடி யமாஹா சீனிவாசன் வீட்டில் 27 தோட்டாக்கள் பறிமுதல்: கோட்டூர்புரத்தில் பரபரப்பு

சென்னை: கோட்டூர்புரம் ரவுடி யமாஹா சீனிவாசன் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 27 துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவாக உள்ள யமாஹா சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை ேசர்ந்த ரவுடி மோகன்ராம் என்பவனை மும்பையில் அங்குள்ள போலீசார் கைது செய்தனர். அவனிடம்  இருந்து துப்பாக்கிகளும் பறிமுதல் ெசய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடி மோகன்ராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் இருந்து  துப்பாக்கிகளை வாங்கி வந்து தமிழக ரவுடிகளுக்கு விற்பனை செய்ததாக  அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளான்.

இதுகுறித்து மும்பை போலீசார் ெசன்னை போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கோட்டூர்புரம் பீலியம்மன் கோயில் தெருவை சேர்ந்த  ரவுடி யமாஹா சீனிவாசன் (34)  என்பவரின் வீட்டில் ேநற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் வீட்டிற்கு வருவதை அறிந்த ரவுடி யமாஹா சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர்  வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. பிறகு வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ரவுடியின் யமாஹா பைக்கை சோதனை செய்த போது,  பெட்டியில் 27 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள யமாஹா சீனிவாசனிடம் துப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார்  ரவுடியை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவாக உள்ள யமாஹா சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : merchant leader ,house ,Rowdy Yamaha ,Srinivasan , According,merchant leader, Rowdy Yamaha,seized ,27 bullets,Srinivasan house:
× RELATED பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல்...