கும்பகோணம்: நவராத்திரி விழாவையொட்டி கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நவராத்திரி பொம்மைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காகித கூழ், களிமண், சுண்ணாம்பு போன்ற மூல பொருட்களைக் கொண்டு இந்த பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் 10 கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை கலைக்கட்டியுள்ளது. இதில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அப்துல்கலாம்,காமராஜர் போன்ற உருவ பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அதனை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி