×

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதற்கு முத்தரசன் கண்டனம்

சென்னை : பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபாலை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன்,நக்கீரன் கோபாலை பார்க்க சென்ற வைகோவை கைது செய்ததும் கண்டனத்துக்குரியது என்று கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nakheeran Gopal ,Muthrasan ,arrest , Muthrasan denounced the arrest of journalist Nakheeran Gopal
× RELATED சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்...