×

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

கெய்ரோ: எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எகிப்து நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

பயங்கரவாதிகள் வாகனங்களில் கும்பலாக வந்து அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதலினால் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தது.

இந்நிலையில், சினாய் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கர தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக எகிப்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆய்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,security forces ,Sinai ,Egypt , Egypt, security force, attack, terrorists, shot dead
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...