×

2 ஏவுகணை வடகொரியா சோதனை

சியோல்: ஐநா.வின் விதிமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த காலத்தில், வடகொரியாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பொருளாதாரத் தடை, 2018ம் ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நேரடி பேச்சுவார்த்தை போன்ற டிரம்பின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. தற்போது, அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு, மீண்டும் ஏவுகணை பரிசோதனையை அது நடத்தி உள்ளது. ‘நேற்று முன்தினம் காலை வடகிழக்கு கடற்கரையில் இருந்து 450 கிமீ தொலைவுக்கு 2 ஏவுகணைகளை ஏவி, அது வெற்றிகரமாக பரிசோதித்ததாக  தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்று கருதப்படுகிறது….

The post 2 ஏவுகணை வடகொரியா சோதனை appeared first on Dinakaran.

Tags : North Korea ,Seoul ,UN ,Wynn ,Trump ,President ,U.S ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...