×

வளர்ச்சி திட்ட பணிகள்: கரிகாலன் வாக்குறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு, தனது வாகன பிரசாரத்தை துவக்கினார். அப்போது, அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பேசியதாவது, ‘‘நான் தாம்பரம் நகர்மன்ற தலைவர் பதவி வகித்தபோது,  இப்பகுதிக்கு செய்யப்பட்ட சாலை வசதிகள், மழைநீர் வடிகால், குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளேன். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால், மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருவேன். சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தின்போது, கட்சி செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், மாநில அமமுக ஐ.டி.விங் துணை செயலாளர் நவீன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி, தேமுதிக நகர செயலாளர் செழியன், அபயம் லெமூரியர், அமமுக தாம்பரம் நகர 5வது வட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

The post வளர்ச்சி திட்ட பணிகள்: கரிகாலன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Karikalan ,Tambaram ,AAM ,Tandu Mariamman ,Ranganathapuram ,West Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!