×

‘சிங்கப்பூர், மலேசியாவில் தனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்’!: கடம்பூர் ராஜூ ஆவேசம்..!!

தூத்துக்குடி: சிங்கப்பூர், மலேசியாவில் தனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அவர், தனக்கு எதிராக அமமுக மண்டல பொறுப்பாளர் மணிகராஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பரப்புரையின் போது பதிலளித்தார். தன் மீது ஆதாரமற்ற புகார் கூறியதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக கூறியுள்ளார். விமர்சனத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் சிங்கப்பூர், மலேசியாவில் தனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிடிவி தினகரன் தான் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்கு முயற்சி செய்து அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதேபோல், தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், நேற்று இரவு அருப்புக்கோட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு வந்துசேர இரவு 10 மணி ஆகிவிட்டதால் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நீண்டநேரம் காத்திருந்த தேமுதிக தொண்டர்கள் விஜயபிரபாகரனுடன் மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எரிச்சலடைந்தனர். …

The post ‘சிங்கப்பூர், மலேசியாவில் தனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்’!: கடம்பூர் ராஜூ ஆவேசம்..!! appeared first on Dinakaran.

Tags : Singapore, Malaysia ,Kadampur Raju ,Thoothukudi ,Minister ,Kadambur Raju ,Dinakaran ,
× RELATED பிரதமராக யார் வந்தாலும் அதிமுக ஆதரவு...