×

திமுக பிரமுகர் அண்ணனை கொல்ல முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர் சிக்கினர்: ஒருவருக்கு வலை

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரரை கொல்ல முயன்ற கூலிப்படையினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை செங்குன்றம் அருகே சோழவரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சோழவரம் பகுதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் கண்ணன் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.   இவர் கடந்த 27ம் தேதி பெரியபாளையம் அருகே காரில்  சென்றபோது, இவரை கொலை செய்ய மர்ம கும்பல் முயன்றது. இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில், கொலை வழக்கில் மர்ம நபர்கள் குறித்து பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில், சென்னை பட்டாளத்தை சேர்ந்த ராஜா (30), மாதவரத்தை சேர்ந்த விவேக் என்ற லியோ விவேக் (30), அயன்புரம் பாலாஜி (30), ஐசிஎப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (40), கொளத்தூர் அரிகரன் (27), சக்திவேல் (23) ஆகிய 6 பேரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை தேடி வருகிறார்கள். அவரை கைது செய்தால் தான் எதற்காக கண்ணனை கொலை செய்ய முயன்றனர் என விவரம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். …

The post திமுக பிரமுகர் அண்ணனை கொல்ல முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர் சிக்கினர்: ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,DMK ,Oothukottai ,Periyapalayam ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...