நல்லம்பள்ளி : இண்டூர் அருகே பயன்பாட்டிற்கு இருக்கும் சுகாதார வளாகத்தால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்துள்ள பழைய இண்டூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில், முறையான தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
The post பழைய இண்டூரில் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.