×

நந்திகிராமில் வன்முறையை கட்டவிழ்க்க ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாஜக!: ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு தி.காங். கடிதம்..!!

கொல்கத்தா: நந்திகிராமில் சமூக விரோத செயல்களை கட்டவிழ்த்துவிட தொகுதியை சாராத ஏராளமான ரவுடிகளுக்கு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி அடைக்கலம் கொடுத்து மறைத்துவைத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள கடிதத்தில், ரவுடிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் விவரங்களை திரிணாமுல் காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. நந்திகிராமில் ரியா மருத்துவமனை அருகே உள்ள கலிப்பட ஸ்ரீ இல்லத்தில் 10 முதல் 12 சமூக விரோதிகளை மறைத்துவைத்திருக்கும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, இங்கு அடிக்கடி வந்து செல்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிப்பூர் நந்திகிராம் சாலையில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் 50 பேரையும், டெங்குவா என்ற இடத்தில் ஜார்சரண், நரசிம்பூர், ஜஜ்ரிமால் உள்ளிட்ட நந்திகிராமை சேராத 30 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. எம்.எஸ்.கே. ஏறியா என்ற பகுதியில் போஜஹரி சமந்தா என்பவரின் வீட்டில் 30 சமூக விரோதிகள் தங்கி இருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், உடனடியாக இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு மேற்கண்ட இடங்களில் பாஜக நந்திகிராம் வேட்பாளர் சுவேந்து அதிகாரி தங்கவைத்துள்ள சமூக விரோதிகளை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. …

The post நந்திகிராமில் வன்முறையை கட்டவிழ்க்க ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாஜக!: ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு தி.காங். கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nandigram ,D.Cong ,Election Commission ,Kolkata ,Suvendu Adhikari ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...