×

கேப்டன் வேஷம் போட்டவரால் கூட்டத்தில் சலசலப்பு…!

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற ெதாகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து நாகை அவுரித்திடலில் டிடிவி பேசுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாம். அவரது பேச்சை கேட்க கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் டிடிவி வரவில்லை. இதனால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாம். இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல வேடமிட்ட ஒருவர் மேடையில் திடீர் என தோன்றி பேசினார். அப்போது அவர், இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம். சாதாரணமான கூட்டம் இல்லை என்றவுடன் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பிறகுதான் பேசியவர், இது தானா சேர்ந்த கூட்டம் என சொல்ல வந்து உளறியிருக்கிறார் என புரிந்தது. இந்த சலசலப்பை ஆப் செய்வதற்காக உடனே எம்ஜிஆர் பாடல் ஒலிபரப்பப்பட்டு நடனம் நடத்தப்பட்டது. இந்த நடனம் முடிந்ததும் மீண்டும் மேடைக்கு வந்த விஜயகாந்த் வேடமணிந்தவர் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை மாற்றி, மாற்றி சொன்னாராம். உடனே கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் தலைவர் தான் இப்படி பேசுவார் , தலைவர் வேஷம் போட்டவரும் இப்படி தான் பேசுகிறார் என கிண்டல் அடிக்க தொடங்கினர். …

The post கேப்டன் வேஷம் போட்டவரால் கூட்டத்தில் சலசலப்பு…! appeared first on Dinakaran.

Tags : visha ,Nagai district ,Nagai ,Nagi ,Dilvelur ,Vedaranya ,Vishan ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...