×

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று எம்.சி.ரோடு துலுக்கானத்தம்மன் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது  அவர் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதி ஒரு வணிக ஸ்தலம் என்பதால் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் முதல்கட்ட பணிகளை துவக்கி வைக்க ஜெயலலிதா வந்தபோது,  வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றேன். அதனடிப்படையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தற்போது ₹3770 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள  வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நான் நிதியமைச்சராக இருந்தபோது, மெட்ரா ரயில் 2ம் கட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம், மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த கோரினேன்.. அதன் பேரில் சுமார் ₹62 ஆயிரம்  கோடி செலவில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதுபோல், ராயபுரம் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்’ என்றார்….

The post மக்கள் பிரச்னைகளை தீர்ப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Jayakumar ,PHANDADARBETT ,Raipuram ,RC ,Rhode Tulukkanathamman ,Temple ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...