×

காட்பாடி தொகுதியில் தேர்தல் வேலையை புறக்கணிக்கும் அதிமுகவினர்

‘‘இந்தி வேணாம் போடா’’ என்பது போன்ற ஹேஷ்டேக்குகளை பார்த்திருப்போம். ‘‘எங்களுக்கு எலக்‌ஷனே வேண்டாம் போடா’’ என்றபடி தங்கள் கட்சிக்கே எதிர்பாட்டு பாடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள் காட்பாடி சட்டமன்ற  தொகுதியில் சேண்பாக்கம் பகுதி அதிமுகவினர்.  மாநகராட்சியின் 57வது வார்டு அதிமுக செயலாளராக மேகமான பெயரை கொண்டவரை அக்கட்சியின் இரட்டை தலைமை நியமித்திருக்கிறதாம். இவர் அந்த கட்சிக்கு புதியவராம். அவரை எந்த அடிப்படையில் வார்டு செயலாளராக  நியமித்தார்கள் என்று அந்த பகுதி ரத்தங்கள் கொதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்களாம்.இதற்காக பலமுறை வீரமானவருக்கும், தலைமை அலுவலகத்துக்கும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் வெறுத்துப்போன 57வது வார்டு ரத்தங்கள், கட்சியின் லெட்டர்பேடிலேயே, ‘‘தேர்தலை புறக்கணிக்க  போவதாகவும், பூத்களில் உட்கார போவதில்லை’’ என்றும் குறிப்பிட்டு கட்சியின் மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி விட்டார்களாம். இதை அறிந்த அக்கட்சி வேட்பாளர், ‘‘என்னடா இது சோதனை’’ என்று புலம்பி வருகிறாராம்….

The post காட்பாடி தொகுதியில் தேர்தல் வேலையை புறக்கணிக்கும் அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Katpadi ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...