×

மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை: சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் மருத்துவமனையின் வளாகத்தில் இருக்கும் செவிலியர்கள் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள ஆய்வக அறையில் உள்ள ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அங்கிருந்த மாணவிகள் என்னவென்று சுதாரிப்பதற்குள் அதிலிருந்து தீ மளமளவென பரவியது. மேலும் அந்த ஆய்வகத்தின் உள்ளே தெர்மாகோல் மூலம் அமைக்கப்பட்ட கூறையிலும் தீ பரவ ஆரம்பித்தது. வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். …

The post மருத்துவமனையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...