×

செய்யூர் தொகுதியிலுள்ள அனைத்து குறைகளுக்கும் தீர்வு காணப்படும்: விசிக வேட்பாளர் பனையூர் பாபு உறுதி

செய்யூர்: தன்னை தேர்ந்தெடுத்து சட்டமன்றம் அனுப்பினால், செய்யூர் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து குறைகளை தீர்த்து வைப்வேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு உறுதி அளித்தார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், கூட்டணி வேட்பாளர் பனையூர் பாபு அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி கோட்டைகாட்டில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி, வேட்பாளர் பனையூர் பாபுவை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மேலிட பொறுப்பாளர் சூ.க.விடுதலை செழியன், திமுக பேரூர் செயலாளர் இனியரசு, மீனவரணி அமைப்பாளர் பாரத்,  காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் இளஞ்செழியன், இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேசிங், மாநில பேச்சாளர் செந்தில், வட்டார மீனவரணி தலைவர் முனுசாமி, மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர்      அருண்முருகன் ஆகியோர் வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும், வேட்பாளர் பனையூர் பாபு, சால்வை அணிவித்து கவுரவித்தார்.இதையடுத்து, சூனாம்பேட்டில் உள்ள சித்தாமூர் மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் உள்பட கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். பிறகு, சித்தாமூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கண்ணகி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.அறிமுக கூட்டத்துக்கு பின், கோட்டைகாடு பகுதியில் வீதிவீதியாக சென்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு தொகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த பல ஆண்டுகளாக, செய்யூர் தொகுதி எந்தவொரு வளர்ச்சியையும் அடையாமல் அப்படியே உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மருத்துவம், சாலை, போக்குவரத்து உள்ளிட்டவைகள் எதுவும் முறையாக கிடைக்கவில்லை. நான் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், செய்யூர் தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன். தொகுதி மக்களின் குறைகளை தீர்த்து வைத்து, பொதுமக்களின் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி அடைய செய்வேன்’ என்றார்….

The post செய்யூர் தொகுதியிலுள்ள அனைத்து குறைகளுக்கும் தீர்வு காணப்படும்: விசிக வேட்பாளர் பனையூர் பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Deodur ,Bhanaiur Babu ,Wishkari ,Deutur ,Doyur ,Dudur ,Vishkka ,Panayoor Babu ,Dinakaran ,
× RELATED செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில்...