×

எங்களுக்கு பதில் இல்லை என்றால் அவை புறக்கணிப்போம்: மாஜி அமைச்சர் ரேவண்ணா மிரட்டல்

பேரவையில் கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசினார். அதன்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் காகேரி அறிவித்தார். அப்போது திடீரென்று எழுந்த மஜத கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர் ரேவண்ணா, ஹாசன் மாவட்ட நலன் சார்ந்த கேள்வி கேட்டு ஒரு வாரம் கடந்துவிட்டது. எங்களின் கேள்விக்கு அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.  கூட்டுறவு துறை அமைச்சர் இப்போதும் அவையில்தான் இருக்கிறார். பிறகு எதற்காக பதில் தரவில்லை என்று ஆக்ரோசத்துடன் கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் காகேரி, இன்று பதில் கிடைத்துவிடும் என கூறி சமாதானம் செய்ய  முயன்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அசோக், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் மாஜி அமைச்சர் ரேவண்ணாவிடம்  இன்றே பதில் கிடைக்கும் என்று கூறினர். அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உறுதி அளித்தாலும் மாஜி அமைச்சர் ரேவண்ணா  சமாதானம் அடையவில்லை. 5 நிமிட வேலை இதை செய்யவில்லை என்றால் எதற்காக அமைச்சர்கள்? என கூறியதுடன் பதில் கிடைக்கவில்லை என்றால் அவையில் கலந்து கொள்ளமாட்டோம் என மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post எங்களுக்கு பதில் இல்லை என்றால் அவை புறக்கணிப்போம்: மாஜி அமைச்சர் ரேவண்ணா மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Ex-minister ,Revanna Mittal ,Opposition Siddaramaiah ,Revanna ,Dinakaran ,
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...