×

வேட்பாளரை மாத்திட்டாங்களா? தொகுதி மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வாகனம்: ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சிவேட்பாளரை மாத்திட்டாங்களா? தொகுதி மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வாகனம்: ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி

மதுராந்தகம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி.மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுராந்தம் அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்காக பயன்படுத்தும் ஜீப் மதியம் செங்கல்பட்டு புதிய பேருந்துநிலையத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி போட்டுக்கொண்டு இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டபடி சென்றது. இதனை கண்ட பொதுமக்கள், செங்கல்பட்டு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கஜா என்கிற கஜேந்திரனை மாற்ற கோரி, தொகுதியில் உள்ள அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில் செங்கல்பட்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை அதிமுக தலைமை மாற்றிவிட்டு இங்கு பெண் வேட்பாளரை அறிவித்திருக்கிறார்கள் என நினைத்தனர்.செங்கல்பட்டு முக்கிய வீதிகளில் அந்த பிரசார ஜீப் சென்று அதிமுகவின் மரகதத்திற்கு ஓட்டு கேட்டதால்  பொதுமக்கள் மட்டுமின்றி அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் தரப்பிலும் அந்த பிரசார வாகனத்திற்கு செங்கல்பட்டில் யார்? அனுமதி கொடுத்தனர் என்று குழம்பினர். இந்நிலையில் செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார் புதிய பேருந்துநிலையம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி, அவவாகனத்திற்கான அனுமதி கேட்டனர். டிரைவரிடம் உரிய அனுமதி இல்லை. இதனால், உரிய அனுமதி இல்லாமல் வேறொரு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த செங்கல்பட்டு டவுன் போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். …

The post வேட்பாளரை மாத்திட்டாங்களா? தொகுதி மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வாகனம்: ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சிவேட்பாளரை மாத்திட்டாங்களா? தொகுதி மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வாகனம்: ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vahan ,Kanchipuram ,Marakatham Kumaravel ,Maduranthakam ,Separate ,Madhurantham ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி; அதிமுகவை பிளவுபடுத்துவேனா?