×

க.பரமத்தி அருகே வெங்கக்கல்பட்டியில் உடைந்து விழும் நிலையில் சேதமடைந்த மின்கம்பம்-அச்சத்தில் பகுதி மக்கள்

க.பரமத்தி : வெங்கக்கல்பட்டியில் 6 மாதங்களாக எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்துவதென பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சி வெங்கக்கல்பட்டி உள்ளது. இங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.இந்த மின் கம்பங்களில் சமீபகாலமாக சிமென்ட் துகள்கள் உதிர்ந்து காணப்படுவதால் எந்நேரமும் உடைந்து கீழே விழும் அபாய நிலையில் இருக்கிறது. மின்கம்பங்கள் அருகில் வீடுகள் உள்ளதால் வசிப்போர் எந்த நேரத்தில் விழுமோ என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலர்களிடம் மின் கட்டணம் செலுத்தும் போதெல்லாம் பொதுமக்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்லை. இதனையடுத்து மோசமான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் 3 மாதங்களாகியும் பலன் இல்லை என புலம்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிப்போர் எப்போது உடைந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது. இந்த மின் கம்பத்தினால் விபத்து நேரிடுவதற்குள் மாற்ற நடவடிக்கை எடுக்காவிடில் மின் கம்பத்தால் ஏதேனும் பாதிக்கப்பட்டு பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டால் அந்த இடத்திலேயே போராட்டம் நடத்துவதென பொதுமக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளோம் என்றார்….

The post க.பரமத்தி அருகே வெங்கக்கல்பட்டியில் உடைந்து விழும் நிலையில் சேதமடைந்த மின்கம்பம்-அச்சத்தில் பகுதி மக்கள் appeared first on Dinakaran.

Tags : Venkakalpatti ,Paramathi ,K. Paramathi ,Dinakaran ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்