போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் சோர்ஹாட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உம்ரி கிராமம் வழியாக சென்ற பயிற்சி விமானம் ஒன்று, நேற்றிரவு கோயிலின் மேற்கூரை கோபுரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனால் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மூத்த பயிற்சி விமானி உயிரிழந்தார். காயமடைந்த பயிற்சியாளர் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு, சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post கோபுரம் மீது விமானம் மோதல்: மூத்த பயிற்சி விமானி பலி appeared first on Dinakaran.