×

வீட்டு வசதி வாரிய சாலை வழியாக பைக்கில் சென்ற தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ. 1,54,030 பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை வசந்தம் நகர் எதிரே உள்ளது தனியார் பெட்ரோல் பங்க். இது கடந்த நான்கு வருடங்களாக இயங்கி வருகிறது. இதில், உதவி மேலாளராக சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (24) ஆறு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பெட்ரோல் பங்க்  வசூல் பணம் ரூ. 1,54, 030  நேற்று காலை 10.30 மணியளவில் வங்கியில் கட்டுவதற்காக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து இருவர் இவருக்கு பின் வந்துள்ளனர். இவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் நாடித்துள்ளனர்.  இந்நிலையில், அங்கிருந்த  செங்கற்கலை எடுத்து  தலை மற்றும் இடது கைகளிலும் பலமாக தாக்கினர். பின்னர், வைத்திருந்த  பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.அங்கிருந்த கடைகாரர்கள் உடனே   ஆவடி போலீசார் தகவல் கொடுத்தனர். சம்ப இடத்திற்கு உதவி ஆணையர் புருஷேதம்மன், ஆய்வாளர் அருணாசலம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் டெல்லி பாபு மற்றும் காவலர்கள் விரைந்து வந்தனர். பின்னர், அந்த பகுதியில் பதிவான காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மிகவும் பரபரப்பான சாலையில் இது போன்ற வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post வீட்டு வசதி வாரிய சாலை வழியாக பைக்கில் சென்ற தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ. 1,54,030 பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Housing Facility Board Road ,Flush ,Awadi ,Awadi Poonthamalli ,Highway Spring ,Nagar Private Petrol Punk ,Household Facility Board ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!