×

செல்போன் திருடன் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில், புத்தாண்டு அன்று பிரியாணி வாங்க வந்த நபரிடமிருந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (31). இவர், புத்தாண்டு அன்று அதிகாலையில் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி வாங்கினார். அப்பொழுது, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போனது. இதுகுறித்து, முகமது அப்துல் காதர் புளியந்தோப்பு குற்றப்பிரிவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் பிரியாணி கடையிலிருந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் செல்போன் திருடுவது தெரியவந்தது. இதனை வைத்து வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யுவாவ் சுவாங் (எ) சுமன் (28) என்ற நபரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. …

The post செல்போன் திருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Pleyanthoph ,New Year ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்